தென்தாமரைகுளம், நவ.5: தென்தாமரைகுளம் அருகில் உள்ள குமாரப்பெருமாள்விளையை சேர்ந்தவர் ஜேசுதாசன். இவரது மகள் ஜெனீபர் ரெஜி. மதுரையில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஊருக்கு வந்தார். அதன்பின் இங்கு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 1ம் தேதி நாகர்கோவில் செல்வதாக கூறி சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை உறவினர் வீடுகள், நண்பர்கள் வீடுகளில் தேடினர். எந்த தகவலும் இல்லாததால் அவரது தாய் கார்மல் மேரி தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கென்னடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.