×

மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.யில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்

குளச்சல், நவ. 5 :  மத்திய கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்தல்படி மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலையில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 6 நாட்கள் கொண்டாடப்பட்டது. இந்த வருடம் விழிப்புணர்வு வாரத்தின் முக்கிய அம்சமாக ‘நேர்மை ஒரு வாழ்க்கை நெறிமுறை’ என்ற தலைப்பில் கடைபிடிக்கப்பட்டது. நிறைவு விழாவில் பத்மநாபபுரம் சப் கலெக்டர் சரண்யா அறி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆலை தலைவர் செல்வராஜன், கண்காணிப்பு அதிகாரி ரமேஷ்பாபு உள்பட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.


Tags : Manavalakurichi IRE ,
× RELATED கொல்லங்கோடு அருகே ஓட்டலில் தோசை கேட்டவர் மீது தாக்குதல்