×

கொள்ளையர்கள் 2 பேர் கைது 35 பவுன், 1 லட்சம் பறிமுதல்

பெரம்பூர்: கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் அம்பேத்கர் லைன் பகுதியை சேர்ந்தவர் கோதண்டன் (80). இவரது 2 மகள்கள், திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். இந்நிலையில், கடந்த 28ம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 35 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோதண்டன் வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (19), அஜித் (19) ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. கொடுங்கையூர் எம்ஆர்.நகர் சந்திப்பு பகுதியில் தலைமறைவாக இருந்த அவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 பவுன் நகைகள், 1 லட்சம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : robbers ,
× RELATED பட்டாக்கத்தியுடன் திரிந்த 2 ரவுடிகள் கைது