×

பயணி ஆட்டோவில் தவறவிட்ட 25 சவரன் நகைகள் போலீசில் ஒப்படைப்பு : டிரைவருக்கு பாராட்டு

சென்னை:தேனாம்பேட்டை காமராஜர் தெருவை சேர்ந்த பெரியகருப்பன் மனைவி விஜயலட்சுமி (46). நேற்று முன்தினம் உறவினர் இல்ல திருமணத்திற்காக சாலிகிராமத்தில் உள்ள மண்டபத்திற்கு ஆட்டோ மூலம் சகோதரி மகளுடன் சென்றார். ஆட்டோவில் இருந்து இறங்கி, திருமண மண்டபத்திற்குள் சென்றபோது, தனது 25 சவரன் நகை வைத்திருந்த பை மாயமானது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி மண்டபம் முழுவதும் நகை பையை தேடியும் கிடைக்கவில்லை. உடனே விஜயலட்சுமி சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் விசாரித்துக்கொண்டு இருந்தபோது தி.நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் உதயகுமார் நகை  பையுடன் வந்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.  அதில் விஜயலட்சுமியின் 25 சவரன் நகை அப்படியே இருந்தது. அதைதொடர்ந்து போலீசார் ஆட்டோ டிரைவர் உதயகுமாரின் நேர்மையை பாராட்டினர். நகையை தவறவிட்ட விஜயலட்சுமியும் ஆட்டோ டிரைவருக்கு நன்றி தெரிவித்தார்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...