×

கோன் வைண்டிங் ஆலையில் தீ விபத்து

குமாரபாளையம், நவ.1: குமாரபாளையம் நகராட்சி அருகே நடன விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் குமரகுருபரன். இவருக்கு சொந்தமான கட்டடத்தில், பவானி குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கோன் வைண்டிங் ஆலை வைத்துள்ளார். நேற்று இரவு 9 மணியளவில், அங்கு 5 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு கொட்டப்பட்டிருந்த நூலில் இருந்து புகை வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நூலில் தீ பற்றியது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

குடியிருப்பு பகுதி என்பதால், பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டு குடம், பக்கெட், பாத்திரங்களில் தண்ணீரை கொண்டு அனைத்தனர். மேலும், குமாரபாளையம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் சில நூல் மூட்டைகளும், கருவிகளும் தீயில் சேதமானது. சரியான நேரத்தில் பொதுமக்கள் திரண்டு வந்து தீயை அணைத்ததால் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கருவிகள் இயந்திரங்கள் சேதமாகாமல் தப்பியது.




Tags : Cohn Winding Plant ,
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி