×

நாமக்கல், திருச்செங்கோட்டில் இந்திராகாந்தி நினைவு நாள் அனுசரிப்பு

நாமக்கல், நவ.1:  மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 35வது நினைவு தினம், நேற்று நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சேக்நவீத் தலைமையில், இந்திரா காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரப்பன், மாவட்ட செயலாளர் பெருமாள், நகர துணை தலைவர் ராஜேந்திரன், நகர செயலாளர் குப்புசாமி, வட்டார தலைவர் மற்றும் நிர்வாகிகள் சுந்தரம், லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 35வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்திராகாந்தி படத்திற்கு, மாவட்ட தலைவர் தனகோபால் தலைமையில்  மாலை அணிவிக்கப்பட்டது. பொருளாளர் டிஎஸ்டி (எ) பொன்னுசாமி , மாவட்ட துணைத்தலைவர் லோகநாதன், எலச்சிபாளையம் வட்டாரத்தலைவர் ராஜலிங்கம்,   மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவநேசன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் கண்ணன் வரவேற்றார். நகர பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார். இதேபோல், திருச்செங்கோடு நகர காங்கிரஸ் சார்பில், நகர தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நகர பொருளாளர் சிங்காரவேல் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், ராமசாமி, மாநில நெசவாளர் அணி துணை தலைவர் கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Namakkal ,Tiruchengode ,
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு