×

வாலிபர் கொலையில் 3 பேருக்கு ஆயுள்

நாமக்கல், நவ.1: புதுச்சத்திரம் அருகே வாலிபரை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தை அடுத்த  தொட்டிப்பட்டியை சேர்ந்தவர் போத்தநாயக்கர் மகன் வெங்கடாசலம் (29). தந்தை, மகன் இருவரும் புதுச்சத்திரத்தில் ஓட்டல் நடத்தி வந்தனர். கடந்த 2014 டிசம்பர் 15ம் தேதி வெங்கடாசலம் புதுச்சத்திரத்தில் உள்ள ஒரு பழைய நூற்பாலை அருகில் துணியால் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் வெங்கடாசலத்தை கொலை செய்ததாக, பாச்சல் இளங்கோ (34), ஆனந்த் (32), நொச்சிப்பட்டி ரவிச்சந்திரன் (28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், வெங்கடாசலம் கல்லூரி வாலிபர் ஒருவருடன் காட்டுப்பகுதியில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதால், அந்த தகராறில் 3 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோ, குற்றம் சாட்டப்பட்ட இளங்கோ, ஆனந்த், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Tags :
× RELATED சேலத்தில் 103.7 டிகிரி வெயில்