×

கொங்கு நாட்டு வேளாளர் சங்க செயற்குழு கூட்டம்

நாமக்கல், நவ.1: நாமக்கல்லில் கொங்கு நாட்டு வேளாளர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். இதில், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற மேலவை உறுப்பினரும், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட ஜில்லா போர்டு தலைவருமான திருச்செங்கோடு காளியண்ணனின் 100வது பிறந்த தினம் வரும் ஜனவரி 10ம் தேதி வருகிறது. இதை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாடவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க ஆவன செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, எம்எல்ஏ பாஸ்கர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Working Committee Meeting ,
× RELATED கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்