×

சேலம் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி, நவ.1:  சேலம்  மாவட்டம் மஜ்ராகொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் பூபதி(37). கூலி  தொழிலாளியான இவர், கெலமங்கலம் அருகே உள்ள  பைரமங்கலத்தில் தங்கி வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு  அடிமையான இவர், அதிகமாக மது குடித்து வந்ததால், அடிக்கடி வயிற்று  வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்றும் குணமாகவில்லை. இதனால், மனமுடைந்த பூபதி,  பைரமங்கலத்தில் உள்ள தனியார் கம்பெனி ஷெட்டில் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின் பேரில், கெலமங்கலம் போலீஸ் எஸ்.ஐ.  குணசேகரன், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுதொடர்பாக  வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகிறார்.

Tags : Salem ,suicide ,
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!