நாமக்கல், நவ.1: திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே, கிடாரம் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி(45), லாரி டிரைவர். இவர் நேற்று நாமக்கல் அருகே உள்ள செல்லப்பம்பட்டி முனியப்பன் கோயில் அருகில் மயங்கி கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் அவர் உயிரிழந்தார். இது குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்கள்.