×

கிணற்றில் விழுந்த காட்டெருது மீட்பு

தேன்கனிக்கோட்டை, நவ.1: தேன்கனிக்கோட்டை அருகே லட்சுமி நரசிம்மசுவாமி கோயில் உள்ளது. அங்கு தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில், நேற்று முன்தினம் மாலை, வழி தவறி வந்த காட்டெருது விழுந்தது. இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரக அலுவலர் சுகுமார் மற்றும் வனத்துறையினர் கிணற்றில் இறங்கி வலை விரித்து காட்டெருதை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டனர். சுமார் 2 மணிநேரம் போராட்டத்திற்கு பின்பு காட்டெருது மேலே கொண்டு வரப்பட்டு, காட்டிற்குள் விடப்பட்டது.

Tags : Recovery ,well ,
× RELATED 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி தொடர...