×

தரணிசந்திரம் கிராமத்தில் வடிகால் வசதியின்றி தெருவில் பாயும் மழைநீர்

வேப்பனஹள்ளி, நவ.1: . வேப்பனஹள்ளி அருகே உள்ள தரணிசந்திரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால், சாக்கடை கால்வாய் மற்றும் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி, மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைநீர் வழிந்தோட வழியின்றி தெருவில் பாய்ந்தோடுவது மட்டுமின்றி, நீண்ட நாட்களாக அப்படியே தேங்கிக் கிடப்பதால் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சீராக வழிந்தோட வழியின்றி, தெருவில் பாய்ந்த நிலையில், பருவமழை வலுத்துள்ளதால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கிக் கிடக்கிறது. மழைநீருடன் கழிவுநீர் தெருவில் பாய்வதால் மாணவ- மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீண்ட நாட்களாக தேங்கிக் கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மழைநீர் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : street ,village ,
× RELATED சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்