×

இருதரப்பு மோதல் தந்தை, மகனுக்கு கத்திக்குத்து

சேலம், நவ.1: சேலம் அருகே இருதரப்பினர் மோதலில் தந்தை, மகனுக்கு கத்திக்குத்து விழுந்தது. மற்றொரு தரப்பில் பெண் படுகாயமடைந்தார்.சேலம் அருகேயுள்ள வீராணம் தெலுங்கனூரை சேர்ந்தவர் முருகன்(45). இவரது மனைவிக்கும், வீட்டருகே வசித்து வரும் சாரதாவுக்கும் இடையே நேற்று இரவு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், முருகன் தரப்பினரும், சாரதாவின் சகோதர்கள் தரப்பினரும் மோதிக்கொண்டனர். அதில், கத்தி, கொடுவாள் மற்றும் கற்களால் தாக்கினர். இதில், முருகன், அவரது மகன் குணா (16) ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. அதேபோல், சாரதாவும் படுகாயமடைந்தார். 3 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுபற்றி வீராணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Tags : conflict ,
× RELATED மனித – விலங்கு மோதல் தடுக்க சிறப்புப் படை: அன்புமணி வலியுறுத்தல்