திருச்சி, நவ.1: தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட துறையூர் ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். துறையூர் அரசு மருத்துவமனை அருகே வந்த முருகன் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பாண்டி (எ) சூரியபாண்டி என்பவர் பறித்து சென்றார். இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதால் திருச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல்ஹக் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவின்படி துறையூர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ரவுடி சூரியபாண்டியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைந்தனர்.