×

கலெக்டர் பேட்டி திருவெறும்பூர் அருகே மணல் திருடிய 2 பேர் கைது

திருவெறும்பூர், நவ.1: திருவெறும்பூர் பகுதியில் நாள்தோறும் இருசக்கர வாகனம் முதல் டாரஸ் லாரிகளில் மணல் திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள புத்தாவாரம் பகுதியில் காவிரி கரையில் 2 பேர் 2 இருசக்கர வாகனங்களில் மணல் ஏற்றிக்கொண்டு வந்தபோது அந்த வழியாக ரோந்து சென்ற திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையிலான போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், துவாக்குடி தேர்முட்டி தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் ஹரிகிருஷ்ணன்(21), காட்டூர் பாப்பாகுறிச்சி புது தெருவை சேர்ந்த ராமு மகன் ராஜா(36) என்பது தெரிய வந்தது அதன் அடிப்படையில் 2 பேரையும் வழக்குப்பதிந்து கைது செய்ததோடு அவர்களின் டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags : persons ,Thiruverumbur ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...