×

கிணற்றில் முதியவர் சடலம் மீட்பு

தர்மபுரி, நவ.1: பெரும்பாலை அரக்காசனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (69). இவருக்கு ஒரு கண்ணில் மட்டுமே பார்வை உள்ளது. இதனால் இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி, பெருமாள் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கம் தேடினர்.

ஆனால் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், 29ம் தேதி காலை அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில், பெருமாள் சடலமாக கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கும், பெரும்பாலை போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கிணற்றில் தவறி விழுந்தாரா? அல்லது யாரேனும் தள்ளிவிட்டு கொலை செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : corpse recovery ,well ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...