×

இ.கம்யூ., சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி

தர்மபுரி, நவ.1: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், அகில இந்திய ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் பொது செயலாளரும், முன்னாள் எம்.பியுமான குருதாஸ் தாஸ்குப்தா நேற்று மரணமடைந்தார். இதையடுத்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தர்மபுரி மாவட்டக்குழு சார்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஏஐடியூசி மாவட்ட செயலாளர் மணி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தேவராசன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாதேஸ்வரன், நடராஜ், நிர்வாகிகள் ராமன், சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, குருதாஸ் தாஸ்குப்தாவின் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். இதேபோல், அரூரில் மாவட்ட துணை செயலாளர் தமிழ்க்குமரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இண்டூரில் வட்டார பொருளாளர் மாதையன் தலைமையிலும், பாப்பாரப்பட்டியில் வட்டார செயலாளர் பெருமாள் தலைமையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags : Tribute show ,
× RELATED இடைப்பாடியில் அஞ்சலி நிகழ்ச்சி