×

மாவட்ட காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

தர்மபுரி, நவ.1: தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 35வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்திராகாந்தியின் உருவ படத்திற்கு மாவட்டத்தலைவர் கோவி.சிற்றரசு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது, தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி, தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில், தர்மபுரி நகரத்தலைவர், வட்டாரத்தலைவர்கள், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

அரூர்: அரூரில் காங்கிரஸ் கட்சி சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமையில் இந்திராகாந்தி  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வட்டார தலைவர்  சுபாஷ், நவீன், நகர தலைவர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே முக்காரெட்டிப்பட்டியில், காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், இந்திரா காந்தி சிலைக்கு வட்டாரத் தலைவர் பூபதி ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Tags : Indira Gandhi Memorial Day ,District Congress ,
× RELATED பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்