×

திருவண்ணாமலை பஞ். என்.பி.எஸ்.காலனியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருவில்லிபுத்தூர், நவ. 1:  திருவில்லிபுத்தூர் அடுத்த திருவண்ணாமலை பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக தண்ணீர் விணாகி வருகிறது. ஆனால் இதனை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் திருவண்ணாமலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட என்.பி.எஸ் காலனி, தாமரை நகர், திருவண்ணாமலை பகுதிகளுக்கு குடிநீர் குழாய்  நகர் பகுதியான பெருமாள்பட்டி சாலை வழியாக செல்கிறது.

அவ்வாறு செல்லும் குழாய் பெருமாள்பட்டி தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகில் செல்லும் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகி வெளியேறிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து குடிநீர் அதிகளவு வெளியேறி வீணாக அருகிலுள்ள கழிவு நீர் செல்லும் கால்வாயில் கலப்பதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். இது குறித்து அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய  அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தும் அதிகாரிகள் இதுவரை சேதமடைந்த குழாயை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvannamalai Panchayat ,colony ,NPS ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...