×

வாலிபர் கொலையில் கைதான ஒன்பது பேர் மீது குண்டாஸ்

சிவகங்கை, நவ. 1: சிவகங்கையில் கோர்ட்டிற்கு சென்று விட்டு வந்த வாலிபரை கொலை செய்த வழக்கில் கைதான 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.சிவகங்கை அருகே பனங்காடி கிராமத்தை சேர்ந்த காளையப்பன் மகன் ராஜசேகரன் (38). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர் வழக்கு விசாரணை ஒன்றில் சிவகங்கை கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வரும்போது செப்.7 அன்று ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து சிவகங்கை டவுன் போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதில் காளையார்கோவிலை சேர்ந்த சரவணன் (35), தேவகோட்டையை அருகே பப்பனி கிராமத்தை சேர்ந்த தென்னரசு (39) ஆகிய 2 பேர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட திருப்புவனம் அருகே கொத்தங்குளத்தை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (26), மானாமதுரையைச் சேர்ந்த மணி (எ) அருண்நாதன் (24), சிவகங்கையை சேர்ந்த சிவா (எ) பரமசிவம் (27), கவுரிப்பட்டியை சேர்ந்த அருள் (30), அரசனிகீழமேட்டை சேர்ந்த அருண்பாண்டியன் (20), பிரவீன் (20), அரவிந்த் (26), ஆனந்த் (எ)ஆனந்தபாபு (32), சிவகங்கை டி.புதுரை சேர்ந்த வசந்த் (24) ஆகிய ஒன்பது பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சிவகங்கை மாவட்ட எஸ்பி ரோஹித்நாதன், கலெக்டர் ஜெயகாந்தனுக்கு பரிந்துரை செய்தார். ஒன்பது பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தவிட்டதையடுத்து ஒன்பது பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Tags :
× RELATED வடமாடு மஞ்சு விரட்டு: மாடு முட்டி 3 பேர் காயம்