×

அதிராம்பட்டினம் பகுதியில் பயன்பாடற்ற ஆழ்குழாய் கிணறுகள் உள்ளதா? போலீசார் ஆய்வு

அதிராம்பட்டினம், நவ. 1: அதிராம்பட்டினம் பகுதியில் பயன்பாடற்ற ஆழ்குழாய் கிணறுகள் உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்தனர். அதிராம்பட்டினம் பேரூராட்சி மற்றும் அதிராம்பட்டினம் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்பாடற்ற ஆழ்குழாய் கிணறுகள் உள்ளதா என்று இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் உள்ளிட்ட போலீசார் ஆய்வு செய்தனர். அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிள்ளைமார் தெரு மற்றும் சங்கத்துக்கொல்லை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தபோது உப்புத்துறைக்கு சொந்தமான இடத்தில் பயன்பாடில்லாத ஆபத்தான 70 அடி ஆழமான 3 பழங்கால கிணறுகள் கண்டறியப்பட்டது.

இதையடுத்து காவல்துறை மூலம் பயன்பாடில்லாத ஆபத்தான கிணற்றை மூடுவதற்கு உப்புத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மற்ற பகுதிகளிலும் பயன்பாடில்லாத கிணறுகள் உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : area ,Adirampattinam ,Inspection ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...