×

கொலை வழக்கில் கைதான திருப்பூர் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருப்பூர், நவ.1: திருப்பூர், அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கடந்த மாதம் 1ம் தேதி கல்லூரி ரோட்டில் காவேரி நகர் பிரிவு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து, திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராயபுரத்தை சேர்ந்த நந்தகுமார், தஞ்சாவூரை சேர்ந்த முத்துக்குமார், சென்னையை சேர்ந்த பாலாஜி, திருப்பூர் கல்லூரி சாலையை சேர்ந்த உதயா (எ) உதயகுமார் (23) உள்ளிட்டோரை கைது செய்தனர். இதில் ஏற்கனவே நந்தகுமார், முத்துக்குமார், பாலாஜி ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் உதயகுமாரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமாருக்கு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் தற்போது கோவை மத்திய சிறையில் உள்ள உதயகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நேற்று உத்தரவிட்டார்.

Tags : Thiruppur ,murder ,
× RELATED பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு