×

திருக்கருக்காவூர் கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழா

கொள்ளிடம், நவ.1: கொள்ளிடம் அடுத்த திருக்கருக்காவூர் கிராமத்தில் தேவர்ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொள்ளிடம் அடுத்துள்ள திருக்கருக்காவூர் கிராமத்தில் தேவர்ஜெயந்தியையொட்டி முத்துராமலிங்கதேவருக்கு 4ம் ஆண்டு சிறப்பு வழிபாட்டு விழா நடந்தது. முன்னதாக திரளான பெண்கள் பால்குடங்கள் எடுத்துக்கொண்டு முக்கியவீதிகளின் வழியாக ஊர்வலமாக தேவர்சிலைக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து முத்துராமலிங்கதேவர்சிலைக்கு மஞ்சள், திரவியபொடி, இளநீர், பால், தயிர், சந்தனம் முதலான பொருட்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்டு மலர்மாலைகளால் அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்றது. இதில் திருக்கருக்காவூர் நாட்டாண்மை, பஞ்சாயத்தார், தேவர்பேரவையினர், பொதுமக்கள் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வழிப்பட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Thevar Jayanti Festival ,Thirukarukavur ,village ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...