×

வீட்டில் புகுந்து திருடியவர் கைது

வேதாரண்யம், நவ.1: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்தவர் சக்தி (45). சத்துணவு பணியாளராக உள்ளார். நேற்றுமுன்தினம் இவர் வீட்டை பூட்டிவிட்டு பணிக்காக பள்ளி சென்றுவிட்டார். மதியம் இவரது வீட்டை அதே பகுதியைச் சேர்ந்த கோடிலிங்கம் என்பவர் பூட்டை உடைத்து உள்ளே சென்று ரூ.ஆயிரத்தை திருடி உள்ளார். இதை பார்த்த அருகில் உள்ளவர்கள் கோடிலிங்கத்தை பிடித்து வேட்டைக்காரனிருப்பு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோடிலிங்கத்தை கைது செய்தனர்.

Tags : home ,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு