×

தோட்டக்கலை அலுவலர் விளக்கம்

சீர்காழி, நவ.1: நாகை மாவட்டம் சீர்காழியில் இடைவிடாது பெய்துவரும் மழையால் குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பியது. நாகை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று காலை தொடங்கிய மழை மாலை வரை நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இடைவிடாது பெய்து வரும் மழையால் குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கின்றன. பள்ளி, கல்லூரி சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தவாறு வீட்டுக்குச் சென்றனர்.

மழையின் காரணமாக வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழை தொடர்ந்து பெய்தால் நடவு செய்திருக்கும் சம்பா பயிர்கள் மூழ்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது