×

திருமாநிலையூர் பகுதியில் குடிநீர் கசிவு ஏற்பட்டு சாக்கடை வடிகாலில் கலக்கும் அவலம்

கரூர், நவ. 1: கரூர் திருமாநிலையூர் பகுதியில் இருந்து செல்லாண்டிபாளையம் பகுதிக்கு செல்லும் சாலையோரம் கடந்த சில மாதங்களாக குடிநீர் கசிவு ஏற்பட்டு அருகில் உள்ள சாக்கடை வடிகாலில் வீணாக கலந்து வருகிறது.இந்த பிரச்னை குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுநாள் வரை சீரமைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே, தண்ணீரின் தேவையை கவனத்தில் கொண்டு, தண்ணீர் கசிவினை நிரந்தரமாக சரி செய்ய தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Drinking water leakage ,area ,Thirumanthiyur ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி