×

மொஞ்சனூர் தொட்டியப்பட்டி துவக்க பள்ளியில் புதிய கட்டிடம் அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்

க.பரமத்தி, நவ. 1: க.பரமத்தி ஒன்றியம் மொஞ்சனூர் ஊராட்சி தொட்டியப்பட்டியில் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கோவை தொழிலதிபர் ஒருவரால் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டி தரப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன், முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா, மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி வைத்து பேசினர்.

தொடர்ந்து புதிய மாணவர்களுக்கு வித்யாரம்பம் விழா நடத்தப்பட்டது. விழாவில் நன்கொடையாளர்களுக்கு கல்வித் துறை அமைச்சரால் கல்வி காவலர் விருதும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்திக்கு கல்வி நாயகன் விருதும் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட பாசறை செயலாளர் செந்தில்நாதன், முக்கிய நிர்வாகிகள் வைரமடை பாலு, பரமத்தி பிரவின், அத்திப்பாளையம் செல்வக்குமார் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவில் பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி நன்றி கூறினார்.

Tags : Sengottaiyan ,building ,Moghanoor ,Thotapatti Primary School ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...