×

திருமாநிலையூர் பகுதியில் வாய்க்காலில் அடைப்பால் மழை நீர் குளம் போல் தேக்கம்

கரூர், நவ. 1: கரூர் திருமாநிலையூர் அருகே மழைநீர் செல்லும் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது.
கரூர் திருமாநிலையூர் பகுதியில் இருந்து ராயனூர் செல்லும் சாலையோரம் செல்லாண்டிபாளையம், ராயனூர், மில்கேட் ஆகிய பகுதிகளின் வழியாக மழை நீர் செல்லும் வகையில் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.

ராயனூர் திருமாநிலையூர் அருகே இந்த வாய்க்காலில் அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மழைநீர் வாய்க்காலின் வழியாக செல்ல முடியாத அளவுக்கு அடைப்பு அதிகளவு உள்ளது. இதன் காரணமாக, தண்ணீர் தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் நிலை நிலவி வருகிறது.

இந்த பகுதியை சுற்றிலும் குடியிருப்புகளும், விவசாய நிலங்களும் உள்ள நிலையில் இந்த தண்ணீர் தேக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு வாய்க்காலை தூர்வாரி மழைநீர் எளிதாக செல்லும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : area ,reservoir ,Thirumanthiyur ,rainwater pond ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...