×

கரூர் நகராட்சி சிவசக்தி நகரில் புதருக்குள் பயனற்ற நிலையில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி

கரூர், நவ. 1: கரூர் நகராட்சிக்குட்பட்ட சிவசக்தி நகரில் புதருக்குள் பயனற்ற நிலையில் உள்ள சின்டெக்ஸ் டேங்கை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் நகராட்சி மில்கேட் அருகே சிவசக்தி நகர் உள்ளது. ஐந்து தெருக்களை கொண்ட இந்த பகுதியில் சிவசக்தி நகரின் உட்புற குடியிருப்பு பகுதியில் கடந்த 2010ம் ஆண்டில் பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டது. இந்த பகுதியில் உள்ள அனைத்து தரப்பினர்களும் சில ஆண்டுகள் இதனை பயன்படுத்தி, உபரி தண்ணீர் பிரச்னையை போக்கி வந்தனர். ஆனால், நாளடைவில், போதிய பராமரிப்பு குறைவு காரணமாக, டேங்க் எந்தவிதத்திலும் பயன்பாடின்றி உள்ளது.

பராமரிப்பு மற்றும் பயன்பாடு இல்லாத காரணத்தினால் தொட்டியை சுற்றிலும் முட்புதர்கள் வளர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, நகராட்சி அதிகாரிகள் இந்த டேங்க் பகுதியை பார்வையிட்டு, புதர்களை அகற்றி, திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Syndex Drinking Water Tank ,Karur Municipality ,
× RELATED தாந்தோணிமலை வெங்கடேஸ்வரா நகர்...