கன்னியாகுமரி: மகாராஜபுரம் ஊராட்சியில் நரிக்குளத்தில் மழையால் ஒரு வீடு இடிந்து சேதம் அடைந்தது. தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் முடங்கினர். சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஏற்கனவே மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாக காலை 8 மணிக்கு தொடங்குகின்ற படகு சேவை 11.30 மணிக்கு தொடங்கியது. விவேகானந்தர் மண்டபத்திற்கு மட்டும் படகு சேவை நடைபெற்று வருகிறது. திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.