×

ஆபத்தான ஆழ்துளை கிணறுகள் இருந்தால் 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் பொதுமக்களுக்கு அழைப்பு

அரியலூர், நவ. 1: அரியலூர் மாவட்டத்தில் ஆபத்தான ஆழ்துறை கிணறுகள், தரைமட்ட கிணறுகள் இருந்தால் 1077 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.அரியலூர் மாவட்டத்தில் ஏராளமான ஆழ்துளை கிணறுகள், தரைமட்ட கிணறுகள் உள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம மற்றம் நகர்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் காணப்படும் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள், பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் தரைமட்ட கிணறுகள் குறித்து 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். அப்படி தொடர்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.



Tags : bore wells ,public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...