×

முன்விரோத தகராறில் தம்பதிக்கு கொலை மிரட்டல்

தா.பழூர், நவ.1:தா.பழூர் அருகே முன்விரோத தகராறில் தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (33). இவரது மனைவி வினோதா (30). இவர்களுக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் (40), அவரது மனைவி செல்வி (38) ஆகியோருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ரமேஷ் மற்றும் அவரது மனைவி வினோதா ஆகியோர் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ராஜேந்திரன் அவரது மனைவி செல்வி ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரமேஷ் மனைவி வினோதா தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : murder ,
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...