×

கருமத்தம்பட்டியில் சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடம்

சோமனூர், நவ.1:கருமத்தம்பட்டி அருகே உள்ள ராயர்பாளையம் பகுதியில் பழுதடைந்த நிலையில் இருக்கும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கருமத்தம்பட்டி அருகே உள்ள ராயர்பாளையம் பகுதியில் அரசு அங்கன்வாடி பள்ளி செயல்பட்டு வருகிறது, கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான இந்த கட்டிடம் கந்த  2007ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கன்வாடி கட்டிடத்தின் உட்புறச் சுவர் மற்றும் வெளிப்புற சுவர்கள் பல இடங்களில் விரிசல் விட்ட நிலையில் உள்ளது. மேலும் அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் செடிகள் வளர்ந்து புதர் மண்டிய நிலையில் உள்ளதால் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது, மேலும் மழைக்காலங்களில் உட்புறச் சுவற்றில் மழைநீர் இறங்குவதால் கட்டிடம் இடிந்துவிழும் அபாயம்உள்ளது. இதனால் அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சப்படுகின்றனர். இதனால் பள்ளிக்குழந்தைகளை அருகிலுள்ள கணியூர் ஊராட்சி தண்ணீர்பந்தளில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் சேர்த்துள்ளனர்.எனவே, குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பழுதடைந்த அங்கன்வாடி கட்டடத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Anganwadi Building ,Karumathampatti ,
× RELATED பெருங்களூர் ஊராட்சியில் அங்கன்வாடி...