×

லாரி மோதி இறந்த வாலிபரின் பெற்றோருக்கு 25 லட்சம் இழப்பீடு

சென்னை: திருவான்மியூரை சேர்ந்த டிரைவர் பொன்ராஜ் (27), வீட்டின் அருகே நடந்து சென்றபோது, வேகமாக வந்த லாரி மோதி இறந்தார். இதையடுத்து, அவரது பெற்றோர் சண்முக வடிவு, நாராயணன் ஆகியோர் உரிய இழப்பீடு கோரி  சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், பொன்ராஜ் டிரைவராக வேலை செய்து வந்ததும்,  அதன் மூலம் மாதம் 20 ஆயிரம் சம்பளம் வாங்கியதும்தெரியவந்தது. எனவே, அவரது குடும்பத்தினருக்கு 25 லட்சத்து 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : parents ,
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்