×

பட்டாசு கொளுத்தி வீசியதால் விபரீதம் இளம்பெண் கண் பார்வை பறிபோனது: வாலிபர் மீது போலீசில் புகார்

சென்னை: தீபாவளி பண்டிகையின்போது கொளுத்தி வீசிய பட்டாசு சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணின் முகத்தில் வெடித்து கண் பார்வை பறிபோனது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட  பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை அரும்பாக்கம் அன்னை சத்தியா நகரை சேர்ந்தவர் அரிகரன் (32). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி (28). தீபாவளி பண்டிகை அன்று  இரவு வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர்கள் சிலர் பட்டாசுகளை கொளுத்தி சாலையில் வீசிக் கொண்டிருந்தனர். இதில் ஒரு பட்டாசு, சாலையில் நடந்து சென்ற கலைவாணி மீது விழுந்ததில் அவரது முகத்தில்  பட்டு வெடித்தது. இந்த விபத்தில் அவரது கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து மறுநாள் கலைவாணி கண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு ஆய்வு செய்த டாக்டர்கள் கண்ணில் பட்டாசு வெடித்ததில் பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த  கலைவாணி உடனே சம்பவம் குறித்து சூளைமேடு காவல் நிலையத்தில், பட்டாசு கொளுத்தி முகத்தில் வீசிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு ெசய்து பட்டாசு கொளுத்தி வீசிய  நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Complainant ,
× RELATED 11 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்த 6...