×

கோவையில், வெவ்வேறு விபத்துக்களில் பெண் உள்பட 3 பேர் பலி

கோவை, நவ.1:கோவை அடுத்த மதுக்கரை மார்க்கெட் ரோட்டை சேர்ந்தவர் நாச்சிமுத்து மனைவி கருப்பாத்தாள்(70). இவர், நேற்று முன் தினம் அங்குள்ள ரோட்டில் உள்ள கடைக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.கோவை- துடியலூர் அருகேயுள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சாமிநாதன்(65). இவர், நேற்று முன்தினம் இடையர்பாளையம்- வடவள்ளி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு வளைவில் திரும்பும்போது டயர் வழுக்கியதில் பைக்குடன் கீழே விழுந்தார். படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கோவை அடுத்த நீலாம்பூர் ஜீவா வீதியை சேர்ந்த பழனிசாமி மகன் சின்னராஜ் (35). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் திருச்சி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பைக் மோதியது. படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இறந்தார்.

Tags : persons ,accidents ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது