×

இளம்பெண் மாயம்

ஈரோடு, நவ.1:  ஈரோடு கொத்துக்காரர் தோட்டம் சி.என்.கல்லூரி எதிர்புறம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (55), கொசுவலை வியாபாரி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் கோமதி (19). 10ம் வகுப்பு படித்து விட்டு, கார்மெண்ட்ஸில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற கோமதி, நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் மாரியப்பன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயமான கோமதியை தேடி வருகின்றனர்.


Tags :
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...