×

வரட்டுப்பள்ளத்தில் 50.6 மி.மீ. மழை பொழிவு

ஈரோடு, நவ.1: ஈரோட்டில் நேற்று காலை முதல் மாலை வரை பரவலாக மழை பெய்தது. இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்தது. இதில், அதிகபட்சமாக வரட்டுப்பள்ளத்தில் 50.6 மி.மீட்டரும், கொடுமுடியில் 50 மி.மீ. மழையும் பொழிந்தது. இதனால், நீர்நிலைகளான ஏரி, குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகிறது. தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): ஈரோடு-17, பவானி-9, நம்பியூர்-5, தாளவாடி-2, மொடக்குறிச்சி-25, சென்னிமலை-4, அம்மாபேட்டை-4.4, குண்டேரிப்பள்ளம்-19.4, கோபி-36, பெருந்துறை-8.5, சத்தி-3, கவுந்தப்பாடி-40, எலந்தகுட்டைமேடு-6.2, பவானிசாகர்-6.2, கொடிவேரி-4.2.

Tags : Showers ,
× RELATED தென்தமிழகத்தில் இன்றும் நாளையும்...