×

சாலை சீரமைக்காவிட்டால் 4ம்தேதி போராட்டம்

நீடாமங்கலம், நவ.1: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் முணியான்டி தலைமையில் நடந்தது.மாவட்டகுழு உறுப்பிளர்கள் கலியபெருமாள், கைலாசம், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சுமதி, நகர செயலாளர் ஜோசப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நீடாமங்கலம் வெண்ணாறு லைன்கரை அருகில் ,பெரியார் சிலை அருகில், முக்கிய கடைவீதியில், அண்ணாசிலை அருகில், தஞ்சை சாலையில் உள்ள மன்னார்குடி ரயில்வே கேட் அருகில் தேசிய நெடுஞ்சாலையில், சாலையில் குண்டும் குரியுமாக உள்ளது. இந்தசாலையை 3ம் தேதிக்குள் சீரமைக்கா விட்டால் 4ம் தேதி மக்களை திரட்டி நீடாமங்கலம் கடை வீதியில் மிகப்பெரிய சாலை மறியல் செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டது.



Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...