×

வேப்பம்பட்டு அருகே சிக்னல் கோளாறு புறநகர் மின் ரயில்கள் 1 மணி நேரம் தாமதம்

திருவள்ளூர், நவ. 1: திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் நேற்று காலை புறநகர் மின் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும்  அவதிப்பட்டனர். அரக்கோணம்-சென்னை ரயில் மார்க்கத்தில் வேப்பம்பட்டு- திருநின்றவூர் ஆகிய ரயில் நிலையங்கள் இடையே புறநகர் மின்சார ரயில்கள் செல்லும் பாதையில் காலை 9 மணிக்கு திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது.  இதனால் சென்னை நோக்கி செல்ல வேண்டிய புறநகர் மின் ரயில்கள் திருவள்ளூரில் நிறுத்தப்பட்டன. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் பயணிகள், கல்லூரி மாணவர்கள் சரியான நேரத்தில் செல்ல முடியாமல்  அவதிப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து சிக்னல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் காலை 10 மணிக்கு சிக்னல் சீரமைக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக ரயில்கள்  இயக்கப்பட்டன.  இதனால் காலை நேரத்தில் அரசு மற்றும் தனியார் பணிக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

Tags : power trains ,Veppampattu ,
× RELATED வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில்...