×

திருத்தணி நத்தம் கிராமத்தை சேர்ந்த ஏ.கே.சுப்பிரமணி இல்ல திருமணம்

திருத்தணி, நவ. 1: திருத்தணி அடுத்த அகூர், நத்தம் கிராமத்தை சேர்ந்த ஏ.கே.சுப்பிரமணி யாதவ் இல்ல திருமண விழா இன்று நடக்கிறது. இதில் ரோஜா எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துகின்றனர். திருத்தணி அடுத்த அகூர்,  நத்தம் கிராமத்தில் வசிப்பவர் ஏ.கே சுப்பிரமணி (எ) மணி யாதவ். ஏ.கே.எஸ்.ராம்பாய் தம்பதியின் மகனும் ஏ.கே.எஸ் குரூப் நிர்வாக இயக்குனருமான ஏ.கே.ஜெயபிரகாஷ். இவருக்கும் அந்தமான் போர்ட் பிளேரில் வசித்து வரும் பிரதீப் பிரசாத்,  ரேகா பிரசாத் தம்பதியின் மகளுமான டாக்டர் பாயல் பிரசாத் ஆகியோரது திருமணம் திருத்தணி, சித்தூர் சாலையில் உள்ள அமிர்தாபுரம் ஏ.கே.கார்டனில் இன்று காலை 6.33 மணி முதல் 7.30 மணிக்குள் நடக்கிறது. இந்த திருமணத்தில்  நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா உள்பட முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

Tags : AK Subramani ,Thiruthani Nadam ,village ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...