×

மீஞ்சூரில் 4 வயது சிறுமிக்கு தொல்லை பள்ளி வேன் டிரைவர் கைது

பொன்னேரி, நவ. 1: மீஞ்சூர் அருகே எல்கேஜி படிக்கும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதேப் பள்ளியை சேர்ந்த வேன் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் பகுதியை சேர்ந்த 4  வயது சிறுமி மீஞ்சூரில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறாள். சிறுமி தினமும் நெய்தவாயல் கிராமத்தில் இருந்து பள்ளிக்கு சொந்தமான வேனில் சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம்,  வேனில் பள்ளிக்கு சென்றபோது அதே பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வரும் புதுபேடு கிராமத்தை சேர்ந்த ராமன் (37) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளாள். இதனால் அதிர்ச்சி அடைந்த  சிறுமியின் தாய், பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பாபி (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து  விசாரித்தார். விசாரணையில் சிறுமிக்கு ராமன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் ராமனை போலீசார் கைது செய்தனர். பின்னர் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்  சிறையிலடைத்தனர். தனியார் பள்ளி வேன் டிரைவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : school van driver ,
× RELATED சென்னையில் 5 வயது சிறுமிக்கு பாலியல்...