×

பண்ருட்டி அருகே பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது

பண்ருட்டி, நவ. 1: பண்ருட்டி அருகே பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 12 வயது மாணவி. இவர் பண்ருட்டியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் சகதேவ் (21) என்பவர் புதுவை நெட்டப்பாக்கத்தில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாணவி பள்ளிக்கு செல்லும் போது சகதேவ் அவரை பின்தொடர்ந்து சென்று காதலிக்குமாறு கூறி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல் மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது சகதேவ் மீண்டும் அவரை பின்தொடர்ந்து சென்று காதல் தொல்லை கொடுத்ததால் மன உளைச்சல் அடைந்த மாணவி அழுது கொண்டே தனது வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். பின்னர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் வனஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து சகதேவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Lawyer ,Panruti ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு