×

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுயதொழில் துவங்க மானியத்துடன் வங்கி கடன்

புதுக்கோட்டை, நவ.1: புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் துவங்க மானித்துடளன் வங்கி கடன் வழங்கப்படுகிறது. எனவே விருப்பம் உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி வங்கிகள் மூலம் பெறுவதற்கு இணைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பை தேடி நகர்புற பகுதிகளுக்கு இடம் பெயர்தலை தடுக்கவும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக, நலிவடைந்த பிரிவினர் சுயதொழில் தொடங்கி வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, தமிழக அரசின் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 8-ம் வகுப்புத் தேர்ச்சி அடைந்தவர்கள், சுயமாக வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்க முறையே ரூ.1 லட்சம், ரூ.3 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவிக்கு வங்கிகளுக்கு விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு உச்ச வரம்பு முறையே ரூ.1 லட்சம் மற்றும் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி ஆணையிடப்பட்டு உள்ளது. இத்திடத்தின் கீழ் விண்ணப்பித்து வங்கிக்கடன் பெறும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை தமிழக அரசின் மானியமாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளரை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Pudukkottai district ,
× RELATED மதுபிரியர்கள் மகிழ்ச்சி...