×

மருமகனை தாக்கிய மாமனார் கைது

விருத்தாசலம், நவ. 1: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குள்ளன் மகன் சத்தியமூர்த்தி (30). இவருக்கும், பெண்ணாடம் அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி மகள் பிரதினா (18)  என்பவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த 5 வருடத்துக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இதில் தற்போது 3 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 4 மாதங்களாக இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து,  பிரிதினா தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மனைவியை அழைத்து வர சத்தியமூர்த்தி மாமியார் வீட்டுக்கு சென்ற போது, அவரது மாமனார் சத்தியமூர்த்தி (50)  எதற்காக இங்கு வந்தாய் எனக் கூறி அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் படுகாயமடைந்த சத்தியமூர்த்தி திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுகுறித்து சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிந்து மாமனார் சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : son-in-law ,
× RELATED குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என...