×

கலெக்டர் வேண்டுகோள் புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

புதுக்கோட்டை,நவ.1: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராஜகோபாலபுரம் செல்லும் சாலையை செப்பனிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுதுதுள்ளனர்.புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியில் பல நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராஜகோபாலபுரம் செல்ல டிஎஸ்பி அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகம் அமைத்துள்ள சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும் மாவட்ட வேளாண்மை அலுவலகம், தோட்டக்கலைதுறை அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு தினசரி பலர் வந்து செல்கின்றனர். இந்த சாலை எப்பொழுதும் வாகனங்கள் செல்லும் சாலையாக மாறிவிட்டது. இந்நிலையில் அந்த சாலை தற்போது சேதமடைந்துவிட்டது. இதனால் அந்த சாலை வழியாக செல்வோர் அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருகின்றனர். மேலும் வாகனங்கள் சேதமடைந்துவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இதனால் சம்மந்தப்பட்ட அரசு நிர்வாகம் முறையான நடவடிக்கையை மேற்கொண்டு அந்த சாலையை செப்பனிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராஜகோபாலபுரம் செல்லும் சாலை சேதமடைந்துள்ளால் சாலையில் தற்போது பெய்துள்ள மழை தேங்கி கிடக்கிறது. இதனால் நடந்து செல்வோர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிறமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் சம்மந்தப்பட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Tags : Collector ,public ,Pudukkottai ,road ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...