×

6 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்

சங்கராபுரம், நவ. 1:  விழுப்புரம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி கோட்டப்பொறியாளர் தேவயிரக்கம் அறிவுறுத்தலில் பேரில் எதிர்வரும் பருவ மழையினை முன்னிட்டு மரங்கள் வைத்து  பராமரிக்க சங்கராபுரம் வட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் உதவி கோட்டப்பொறியாளர் பிரபாகரன் தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலை, கடலூர்- திருக்கோவிலூர் மற்றும் சங்கராபுரம் சாலை, தியாகதுருகம் - அடரி சாலை, திருக்கோவிலூர் மற்றும் தியாகதுருகம் சாலை, வெள்ளிமலை மற்றும் மூலக்காடு-புதூர் சாலை, பகண்டைகூட்டுரோடு- மாமந்தூர் போன்ற சாலைகளில் சுமார் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுவருகிறது. உதவிப்பொறியாளர் சர்மா மரக்கன்றுகளை பரா
மரிக்கும் பணிகளை மேற்கொண்டார். இது வரை 6ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை