×

அங்கன்வாடி மையம் எதிரே தரையில் திடீர் பள்ளம்

திருக்கனூர், நவ. 1:   திருக்கனூர் அருகே சோம்பட்டு அங்கன்வாடி மையம் எதிரே தரையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.  திருக்கனூர் அருகே சோம்பட்டில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் நேற்று முன்தினம் அங்கன்வாடி மையத்தின் அருகே  தரையில் திடீரென வட்ட வடிவில் உள்வாங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கன்வாடி ஊழியர்கள், அந்த பகுதியில் குழந்தைகளை விடாமல் சிறுசிறு குச்சிகளை நட்டு அடையாளப்படுத்தி விபத்து ஏற்படாத வண்ணம் தடுத்தனர்.அந்த பள்ளம் எப்படி ஏற்பட்டது, கிணறு வெட்டிய பள்ளமா? அல்லது பழங்கால உறைகிணறா? என தெரியவில்லை. எனவே புதுச்சேரி அரசு அந்த இடத்தை ஆய்வு செய்து பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : ground ,Anganwadi ,center ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியத்தில் ரூ.36...