×

ஜோலார்பேட்டை அருகே தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை

ஜோலார்பேட்டை, நவ.1: ஜோலார்பேட்டை அடுத்த இடையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயன்.  இவரது மகன் கதிரவன்(24). இவரது பெற்றோர் கோவையில் கூலி வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில் கதிரவன் கடந்த சில மாதங்களாக  ஜோலார்பேட்டை அருகே உள்ள திருப்பத்தூர்- வாணியம்பாடி சாலை கட்டேரி கூட்ரோடு பகுதியில் பானிபூரி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில தினங்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று  முன்தினம் இரவு வீட்டில் கதிரவன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த, அவரது உறவினர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே  இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,Jolarpet ,
× RELATED ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில்...