×

சுசீந்திரம் கோயிலில் சாமி கும்பிட வந்த பெண்ணிடம் செயின் பறிப்பு

நாகர்கோவில், அக்.31: சுசீந்திரம் கோயிலில் சாமி கும்பிட வந்த பெண்ணிடம், தங்க செயினை மர்ம நபர் பறித்து சென்றார்.  விருதுநகர்  மாவட்டம் சிவகாசி அண்ணாநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது  மனைவி பானு (48). இவர்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்து  இருந்தனர். நேற்று முன்தினம் காலை சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில்  சாமி தரிசனம் செய்தனர். குருபெயர்ச்சி என்பதால் கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது  கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பானு கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்க  செயினை மர்ம நபர் பறித்தார். சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த பானு,  செயினை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். கோயில் முழுவதும் தேடியும்  கிடைக்கவில்ைல. இது குறித்து பானு, சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை  நடத்தி வருகிறார்கள்.

சுசீந்திரம் கோயிலில் கண்காணிப்பு  கேமராக்கள் உள்ளன. அந்த கேமராக்களை ஆய்வு செய்தனர். பெண்கள் பகுதியில்  நின்றபோது செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளதால், பெண்கள் தான் கைவரிசை  காட்டி இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி  வருகிறார்கள். ஏற்கனவே தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பே பெண் திருட்டு  கும்பல் குமரியில் ஊடுருவி உள்ள தகவல் தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது.
இதன்  பேரில் 2 பெண்களும் சிக்கினர். ஆனாலும் இந்த கும்பலை சேர்ந்தவர்கள்  தொடர்ந்து குமரியில் முகாமிட்டு கைவரிசை காட்டி வருவது தெரிய வந்துள்ளது.  எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து திருட்டு கும்பலை சேர்ந்தவர்களை  கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chamee ,Sami Kumbi ,Susindram Temple ,
× RELATED சுசீந்திரம் கோயில் தேர்களுக்கு...